தேர்தல் முடிவுகள் எதிரொலி.. தொடக்கத்திலேயே பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவு!
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.
Recommended Video

மும்பை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது. மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று மாலை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலையே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. 1 டாலருக்கு நிகராக 71.35 ரூபாயாக இருந்த மதிப்பு 72.34 ரூபாயாக தற்போது சரிந்து இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் மற்றும் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.
அதேபோல் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தை 200 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, இல்லை பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications