தேர்தல் முடிவுகள் எதிரொலி.. தொடக்கத்திலேயே பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவு!
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.
Recommended Video

மும்பை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது. மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று மாலை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலையே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. 1 டாலருக்கு நிகராக 71.35 ரூபாயாக இருந்த மதிப்பு 72.34 ரூபாயாக தற்போது சரிந்து இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் மற்றும் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.
அதேபோல் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தை 200 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, இல்லை பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications