லாக்டவுனில் தனிமையில் இருந்த சுஷாந்த்.. உடல்நலம் வேறு பாதிப்பு.. தற்கொலைக்கு தூண்டியது எது?
மும்பை: மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் பெறும் வெற்றி பெற்று தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்த நிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
பீகார் அரசியல் குடும்பம்- சுஷாந்த்சிங் ராஜ்புத் அண்ணன் 3 முறை எம்.எல்.ஏ.- அண்ணி அதிரடி எம்.எல்.சி
லாக்டவுன்
இவரை பார்க்க வந்த நண்பர் அளித்த தகவலின் பேரில் சுஷாந்த் வீட்டிற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து அவரது சடலத்தை மீட்டனர். லாக்டவுனால் அவர் அந்த வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவரது தற்கொலைக்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
மும்பை
எனினும் முதற்கட்ட விசாரணையில் நடிகர் சுஷாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவரது பெண் மேனேஜர் திஷா சாலியனும் மும்பையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பயணம்
தற்போது சுஷாந்தும் தற்கொலை செய்து கொண்டதால் இருவரது சாவிலும் ஏதோ மர்மம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது விளையாட்டு துறையினரையும் அதிகமாக பாதித்துள்ளது. இவர் ஜீ டிவியில் ஒரு டிவி ஷோ மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார்.
வாய்ப்பு
நடிகை அங்கிதா லோக்நாடேவுடன் இவரது கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆனதால் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமே இருந்தது. இதையடுத்து பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினார். சுஷாந்த் சிங் நடித்த கடைசிப் படமான Chhichhore தற்கொலைக்கு எதிராக எப்படி போராடி வெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திய கதையாகும். இது போன்ற படத்தில் நடித்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.