சட்டசபை வாக்கெடுப்பில் நிச்சயம் வெல்வோம்: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல் நம்பிக்கை
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நவம்பர் 30-ல் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா அணி வெல்லும் என மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத திருப்பமாக என்சிபி பிளவுபட்டுள்ளது. என்சிபியின் அஜித் பவார் பிரிவு, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

இதனையடுத்து நேற்று முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர். இதனால் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா கட்சிகள் பெரும் அதிர்ச்சியடைந்தன.
சிவசேனா ஆட்சி அமைக்க என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதத்தை பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தந்தது என ஆளுநரிடம் அஜித் பவார் கூறிவிட்டார் என்பது என்சிபி புகார். இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் வகையில் ரிசார்ட் அரசியல் திரும்பியுள்ளது.
இப்படி தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் பட்னாவிஸிடம் இருந்து மட்டுமல்ல.. ஆளுநரிடம் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் இருந்தும் நாம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறோம்.
இந்த நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டு வெல்ல வேண்டும் எனில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டசபையில் நவம்பர் 30-ல் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாமே வெல்வோம். அதற்கான அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications