அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஐஸ்வர்யா ராயை பார்த்தீர்களா? 100 % உறுதிப்படுத்தும் "அந்த" சம்பவம்?
மும்பை: உலக அழகி ஐஸ்வர்யா ராயும், அவருடைய கணவர் அபிஷேக் பச்சனும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய்! அன்றெல்லாம் பெண்கள் காதலுக்கு உடனே ஓகே சொல்லாவிட்டால், அந்த பையனின் நண்பர்கள் சொல்லும் ஒரு வார்த்தை- "மச்சான் இவ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா? விட்டு தள்ளு" என்பார்கள்.

அந்த அளவுக்கு அழகாக இருப்பார். இவருக்கும் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் பிரிய போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அபிஷேக் பச்சனின் கையில் பச்சை நிற மோதிரம் இல்லாதது என்கிறார்கள். திருமணம் செய்து 16 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் பிரிவதாக வந்த தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில் ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கிற்கும் திருமணமானதில் இருந்தே பிரச்சினைதான். அபிஷேக்கை விட மூத்தவர் ஐஸ்வர்யா!. ஆனாலும் காதலுக்காக இருவரும் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஈகோதான் முதல் பிரச்சினையாக இருந்தது.
தன்னை விட ஐஸ்வர்யா பெயர், புகழ், பணம் என இருப்பது அபிஷேக்கிற்கு ஈகோ ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. இது இலை மறைவு காய் மறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த பிரிவு என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிகேசி கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், மாநில இன்னாள், முன்னாள் முதல்வர்கள், ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா - ஜோதிகா ஆகியோர் சென்றனர்.
அந்த வகையில் அமிதாப் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், அவருடைய சகோதரி, அவருடைய கணவர், அவர்களது மகன், மகள் ஆகியோர் வருகை தந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஐஸ்வர்யா பச்சன் அவருடைய மகள் ஆராத்யாவுடன் தனியே வருகிறார். ஜெயா பச்சன் தனது மகள் குடும்பம் வந்த பிறகுதான் புகைப்படமே எடுத்தார். ஆனால் அபிஷேக் பச்சன் ஜோடியாக இல்லாமல் தனியாகவே அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.
எனவே நெருப்பில்லாமல் புகையாது என்பதை போல் இவர்களுக்குள் ஏதோ பிரச்சினை இருப்பது ஊர்ஜிதமாவதாகவே சொல்லப்படுகிறது. ஜெயா பச்சன் ஒரு வேளை ஐஸ்வர்யாவை பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. திடீரென அவருடைய முகம் கடுகடுத்து காணப்பட்டது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications