அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஐஸ்வர்யா ராயை பார்த்தீர்களா? 100 % உறுதிப்படுத்தும் "அந்த" சம்பவம்?
மும்பை: உலக அழகி ஐஸ்வர்யா ராயும், அவருடைய கணவர் அபிஷேக் பச்சனும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய்! அன்றெல்லாம் பெண்கள் காதலுக்கு உடனே ஓகே சொல்லாவிட்டால், அந்த பையனின் நண்பர்கள் சொல்லும் ஒரு வார்த்தை- "மச்சான் இவ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா? விட்டு தள்ளு" என்பார்கள்.

அந்த அளவுக்கு அழகாக இருப்பார். இவருக்கும் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் பிரிய போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அபிஷேக் பச்சனின் கையில் பச்சை நிற மோதிரம் இல்லாதது என்கிறார்கள். திருமணம் செய்து 16 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் பிரிவதாக வந்த தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில் ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கிற்கும் திருமணமானதில் இருந்தே பிரச்சினைதான். அபிஷேக்கை விட மூத்தவர் ஐஸ்வர்யா!. ஆனாலும் காதலுக்காக இருவரும் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஈகோதான் முதல் பிரச்சினையாக இருந்தது.
தன்னை விட ஐஸ்வர்யா பெயர், புகழ், பணம் என இருப்பது அபிஷேக்கிற்கு ஈகோ ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. இது இலை மறைவு காய் மறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த பிரிவு என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிகேசி கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், மாநில இன்னாள், முன்னாள் முதல்வர்கள், ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா - ஜோதிகா ஆகியோர் சென்றனர்.
அந்த வகையில் அமிதாப் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், அவருடைய சகோதரி, அவருடைய கணவர், அவர்களது மகன், மகள் ஆகியோர் வருகை தந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஐஸ்வர்யா பச்சன் அவருடைய மகள் ஆராத்யாவுடன் தனியே வருகிறார். ஜெயா பச்சன் தனது மகள் குடும்பம் வந்த பிறகுதான் புகைப்படமே எடுத்தார். ஆனால் அபிஷேக் பச்சன் ஜோடியாக இல்லாமல் தனியாகவே அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.
எனவே நெருப்பில்லாமல் புகையாது என்பதை போல் இவர்களுக்குள் ஏதோ பிரச்சினை இருப்பது ஊர்ஜிதமாவதாகவே சொல்லப்படுகிறது. ஜெயா பச்சன் ஒரு வேளை ஐஸ்வர்யாவை பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. திடீரென அவருடைய முகம் கடுகடுத்து காணப்பட்டது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications