சோனியா குறித்து விமர்சனம்- அர்னாப் கோஸ்வாமியை 12 மணிநேரம் இடைவிடாமல் குடைந்தெடுத்த மும்பை போலீஸ்
மும்பை: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குறித்து இழிவான விமர்சனத்தை முன்வைத்த ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் 1 2 மணிநேரம் இடைவிடாமல் விசாரணை நடத்தினர்.
மகாராஷ்டிராவின் பால்கரில் சாதுக்கள் இருவரை பொதுமக்கள் அடித்து படுகொலை செய்தனர். குழந்தை திருடும் கும்பல் என தவறாக கருதி பொதுமக்கள் சாதுக்களை அடித்து கொலை செய்தனர்.

இதில் மதம்சார்ந்த பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் இதனை தமது ரிபப்ளிக் டிவியில் விவாதித்த அர்னாப் கோஸ்வாமி, மவுலவி ஒருவர் கொல்லப்பட்டிருந்தால்.. பாதிரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் எல்லோரும் மவுனமாக இருப்பார்களா?
காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான இத்தாலிய சோனியா மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி அவதூறாக விமர்சித்தார். இதனால் கொந்தளித்த காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனால் எந்த நேரத்திலும் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால் தம்மை கும்பல் ஒன்று தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி திடீரென புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் தம்மை கைது செய்யாமல் இருக்க முறையிட்டார் அர்னாப்.
இதனை ஏற்று அர்னாப்பை 3 வார காலம் கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். நேற்று காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் அர்னாப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது.
Recommended Video
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னாப், தாம் போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications