பெண் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக அர்னாப்பின் மனைவி, மகன் மீதும் எப்ஐஆர்
மும்பை : பெண் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி, மகனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
2018 ஆம் ஆண்டில் 53 வயதான உள் கட்டட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்கு தூண்டியதாக அலிபாக் போலீசார் அர்னாப் கோஸ்வாமியை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே அலிபக் காவல்நிலைய போலீஸ் டீம் இன்று காலை மும்பையில் உள்ள அர்ணாப் இல்லத்திற்கு அவரை கைது செய்ய சென்ற போது அர்னாப் கோஸ்வாமி ஒரு பெண் போலீஸ் அதிகாரியைத் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மும்பையின் என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் அர்ணாப் கோஸ்வாமி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மனைவி மகன் மீது பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க தாக்குதல் ), 504 (அமைதி சீர்குலைத்து வேண்டுமென்றே அவமதிப்பது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications