Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ரூ.30,000 கோடி'.. BCCI-யிடம் எவ்வளவு கோடி இருக்கு தெரியுமா? வட்டியாக ரூ.1000 கோடி கிடைக்குதாம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிசிசிஐ-க்கு 2023-24ம் நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இதில் ஐபிஎல்லில் இருந்து மட்டும் ரூ.5,761 கோடி கிடைத்துள்ளது. அதோடு பிசிசிஐயின் மொத்த கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி உள்ளதாகவும், ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடியை வட்டியாக மட்டும் தான் கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில், பிசிசிஐ எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணக்கார வாரியமாக உள்ளது. இதன் ஆண்டு வருவாய் என்பது மிகவும் அதிகம். இன்னும் சொல்லப்போனால் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விட பிசிசிஐயின் வருமானம் பலமடங்கு அதிகம்.

bcci-earns-rs-1000-cr-every-year-in-interest-alone-sits-on-30-000-crore-reserves

இந்நிலையில் தான் பிசிசிஐயின் ஆண்டு வருமானம், கையிருப்பு, ஐபிஎல்லில் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

பிசிசிஐ-க்கு 2023-24ம் நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இதில் ஐபிஎல்லில் இருந்து மட்டும் ரூ.5,761 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் பிசிசிஐயின் மொத்த வருவாயில் ஐபிஎல் மட்டும் 60 சதவீதத்தை ஈட்டி கொடுத்துள்ளது. பிசிசிஐக்கு இப்படி வருமானம் குவிய முக்கிய காரணம் அதன் விளம்பரம், ஊடக ஒப்பந்தம் மற்றும் ஸ்பான்ஷர்ஷிப்பும் முக்கிய காரணமாகும்.

ஐபிஎல் தவிர பிசிசிஐக்கு ஊடக ஒப்பந்தம் மூலமாக ரூ.361 கோடி வரை கிடைத்துள்ளது. மகளிர் பிரிமீயர் லீக் மூலமாகவும் வருவாய் கிடைத்துள்ளது. வரும் காலத்தில் இந்த வருமானம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐயின் கையிருப்பு என்பது ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இதன்மூலம் ஆண்டு வருமானமாக ரூ.1,000 கோடி கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ரெட்ஃயூஷன் நிறுவனத்தின் தலைவர் சந்தீப் கோயல் கூறுகையில், ‛‛ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சிகே நாயுடு டிராபி போன்ற பாரம்பரிய கிரிக்கெட்டுகளை வணிகமாக்கபபட்டுள்ளது. இதுதவிர ஐபிஎல்லும் கைக்கொடுக்கிறது. ஐபிஎல் போன்று ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சிகே நாயுடு டிராபியையும் வணிகமாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் இன்னும் கூட அதிக வருவாய் பிசிசிஐக்கு கிடைக்க உள்ளது.

பிசிசிஐயிடம் தற்போது ரூ. 30,000 கோடி கையிருப்பு வைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹1,000 கோடி வட்டி வருமானமாக கிடைக்கிறது. இது அப்படியே இருப்பது இல்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இதனால் பிசிசிஐயின் வருமானம் ஆண்டுக்கு 10-12% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

இதுதொடர்பாக பிரபல வர்த்தக வியூக நிபுணர் லாயிட் மதியாஸ் கூறுகையில், ‛‛2007ல் பிசிசிஐ, ஐபிஎல் என்ற தங்க முட்டையிடும் வாத்தை கண்டுபிடித்தது. ஐபிஎல் புகழ்பெற்றது. அதேபோல் ரஞ்சி கோப்பை வீரர்களையும் விளையாட அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி ஊடகம், விளம்பர ஒப்பந்தம் உள்ளிட்டவற்றையும் பெற்றது. இதனால் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+