Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் ஏலம்: எவ்வளவு வீரர்களை அணி தக்க வைக்கலாம்? வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர்? பிசிசிஐ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்ந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் மூன்று வீரர்களை தேர்வு செய்யலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள 8 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகள் அதிகபட்சமாக இப்போது அவர்களிடமுள்ள நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ இன்று அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

8 அணிகள்

8 அணிகள்

"தற்போதுள்ள 8 அணிகள் முதலில் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறும், அதன்பிறகு 2 புதிய அணிகள் ஏலத்திற்கு முன் அதிகபட்சமாக 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்" என்று பிசிசிஐ அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

ஐபிஎல் 2022 சீசனுக்கான சம்பள உச்சவரம்பு அனைத்து அணிகளுக்கும் 90 கோடி ரூபாய் ஆகும். "தற்போதுள்ள 8 அணிகள் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள 2021 நவம்பர் 1 முதல் 2021 நவம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு திறந்து இருக்கும். அதன்பிறகு 2 புதிய அணிகள் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள டிசம்பர் 1 முதல் டிசம்பர் 25ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்க வைக்க முடியாது

தக்க வைக்க முடியாது

பழைய 8 டீம் உரிமையாளர்கள் மூன்று இந்தியர்களுக்கு மேல் (இந்தியாவிற்காக ஆடியவர்கள்/ஆடாதவர்கள் என யாராக இருந்தாலும்) வீரர்களைத் தக்கவைக்க முடியாது என்றும், அதே நேரத்தில் தக்கவைப்பு பட்டியலில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை இரண்டு என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு அணி இரண்டுக்கு மேற்பட்ட புதிய வீரர்களை அதாவது, இந்திய அணிக்கு ஆடாத புதிய வீரர்களை தக்க வைத்திருக்க முடியாது. ஏலத்தில்தான் எடுக்க வேண்டும் எனஅறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய அணிகளுக்கு ரூல்ஸ்

புதிய அணிகளுக்கு ரூல்ஸ்

புதிய அணிகளைப் பொறுத்தவரை, இரண்டு இந்திய வீரர்களை ஏலமில்லாமல் எடுக்கலாம். வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஒருவராக மட்டுமே இருக்க முடியும். தவிர, புதிய அணிகள் ஏலத்திற்கு முன் ஒரே ஒரு புதிய வீரரை அதாவது இந்தியாவிற்கு ஆடாத புதிய வீரரை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய அணிக்கு கட்டுப்பாடு

புதிய அணிக்கு கட்டுப்பாடு

மொத்தத்தில், புதிதாக வந்துள்ள அணிகளுக்கு அணி தேர்வு என்பது சற்று சிரமமான விஷயமாக இருக்கப்போகிறது என்பதைத்தான் இந்த விதிமுறைகள் காட்டுகின்றன. ஏற்கனவே உள்ள அணிகளுக்கு கூடுதல் உரிமை தரப்பட்டுள்ளதாகத்தான் இதை பார்க்க முடிகிறது என்று, ரசிகர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+