மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவிகே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கான திட்டத்தில் ரூ. 750 கோடிக்கு ஊழல் செய்ததாக ஜிவிகே குழுமத்தின் தலைவர் ஜிவிகே ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் ரெட்டி மீது சிபிஐ போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
மும்பை விமான நிலையத்தை ஜிவிகே குழுமம் கையாண்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், நவீனப்படுத்துதல் என்று அனைத்துப் பணிகளையும் இந்தக் குழுமம்தான் கையாண்டு வருகிறது.

இந்த விமானத்தின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டபோது, ரூ. 750 கோடிக்கு ஊழல் நடந்ததாக, ஜிவிகே குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜிவிகே ரெட்டி, இவரது மகன் சஞ்சய் ரெட்டி மற்றும் சில அரசு பணியாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வகையில் ஜிவிகே ரெட்டி அவரது மகன் சஞ்சய் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சிபிஐ தனது வழக்குப் பதிவில், போலி வேலையாட்கள் ஒப்பந்தங்கள் மூலம் பணம் கையாடல் செய்தது, இந்த கையாடலுக்கு விமான நிலைய வருமானத்தை பயன்படுத்தியது, செலவை அதிகரித்துக் காட்டியது, இருப்புகளை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஜிவிகே ரெட்டி மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளில் விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கு என்று ரூ. 350 கோடிக்கு ஒன்பது நிறுவனங்களுடன் மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒப்பந்தம் செய்ததாக கணக்கில் காட்டியுள்ளது. ஆனால், இந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை. அரசிடம் இருந்து வரிச் சலுகை பெறுவதற்காக ஜிவிகே குழுமம் இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்துடன் மும்பை விமான நிலைய லிமிடெட்டில் இருந்து கிடைத்த வருமானத்தை கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஜிவிகே குழுமம் தனது வேறு நிறுவனங்களுக்கு மாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அப்படி பயன்படுத்திய பணத்தின் மதிப்பு ரூ. 395 கோடி என்று தெரிய வந்துள்ளது. ரூ. 100 கோடி அளவிற்கு செலவினங்களை ஜிவிகே குழுமம் அதிகரித்து காண்பித்துள்ளது.
மேலும், மும்பை விமான நிலையத்தில் இருக்கும் முக்கிய இடங்களை தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஜிவிகே குழுமம் கொடுத்துள்ளது. இதன் மூலம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த வருமானம் கிடப்பது போல் ஜிவிகே குழுமம் காண்பித்துள்ளது.
மும்பை விமான நிலையத்தின் பங்குகளில் 50.5% பங்குகளை ஜிவிகே நிறுவனம் வைத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள பங்குகளை இந்திய விமான நிலைய ஆணையம் வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications