Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதி மோசடி: சிவசேனா எம்.பி. பாவனா கவாலி உதவியாளர் கைது! நெருங்கும் பிடி.. அமலாக்க இயக்குநரகம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 7 இடங்களில் சோதனை நடத்தியுள்ள, அமலாக்க இயக்குநரகம், சிவசேனா எம்.பி. பாவனா கவாலியின் உதவியாளரை கைது செய்துள்ளது.

முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நேற்று மகாராஷ்டிராவில் மூன்று இடங்களில் சோதனை நடத்தியது.

நாக்பூரின் துணை ஆர்டிஓ பஜ்ரங் கர்மேட்டுடன் தொடர்புடை இடங்கள் இவையாகும். முதல்வர் உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய நம்பிக்கையுள்ள போக்குவரத்து அமைச்சர் அனில் பரப்பின் நெருங்கிய கூட்டாளிதான் பஜ்ரங் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சோதனை நடத்தப்பட்ட இடங்களை அமலாக்கத் துறை வெளிப்படுத்தவில்லை.

 அதிரடி தொடர்கிறது

அதிரடி தொடர்கிறது

இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், அதிரடியை தொடர்ந்துள்ளனர். ஆயுதப்படை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புடன், ஜான்ஷிக்ஷன் சன்ஸ்தா, ஷிர்பூரில் உள்ள டிகிரி கல்லூரி, தேகானில் உள்ள ஆயுர்வேத கல்லூரி, மாலேகாவில் உள்ள ஸ்ரீ பாலாஜி சஹகாரி துகள் வாரியம் கர்கானா லிமிடெட் உட்பட பாவனா கவாலியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.

 அரசு மானியங்கள்

அரசு மானியங்கள்

சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், சிலரின் வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் சிவசேனா எம்.பி.க்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு திட்டத்திற்கான அரசு மானியங்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, 17 கோடி அளவுக்கான நிதி மோசடி உள்ளிட்டவை இவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.

மூத்த தலைவர்

மூத்த தலைவர்

பாவனா கவாலி 1999 முதல் யவாத்மால்-வாஷிம் தொகுதி எம்பியாக உள்ளார். 5 முறை லோக்சபா எம்.பியாக இருக்கும் சீனியர் தலைவராகும். வாஷிமில் உள்ள மாலேகானில் அமைந்துள்ள பாலாஜி ஆலைக்கு மானியங்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கவாலி மற்றும் அவர் கூட்டாளிகளால் பண மோசடி மற்றும் மோசடி செய்ததாக சர்தா என்பவர் தனது புகாரில் கூறியுள்ளார். கவாலியின் தந்தை புடலிக்ராவ் அதன் முக்கிய விளம்பரதாரராக இருந்தார்.

 தொழிற்சாலை திட்டம்

தொழிற்சாலை திட்டம்

இந்த தொழிற்சாலை 1998 இல் பயிர் எச்சங்களைச் சேகரித்து, பர்னிச்சர், மற்றும் பல பொருட்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக தயாரிக்க உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த தொழிற்சாலை செயல்படத் தொடங்கவில்லை. 1998 இல், இந்த ஆலைக்கு மதிப்பிடப்பட்ட திட்ட செலவு ரூ.43.85 கோடியாக இருந்தது, ஆனால் அது MITCON என்ற நிறுவனத்தால் ரூ.7.9 கோடிக்கு குறைவாக மதிப்பிடப்பட்டது, இப்படி மதிப்பை குறைத்து ஆகஸ்ட் 16, 2010 அன்று கவாலி நடத்தும் பாவனா அக்ரோ தயாரிப்பு நிறுவனம் அதை வாங்கியது.

உதவியாளர் கைது

உதவியாளர் கைது

புகார்தாரர், தகுதியான அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதியைப் பெறாமல், 2001 ஆம் ஆண்டில், கவாலியின் தந்தை 14.90 ஹெக்டேர் தொழிற்சாலை நிலத்தை மகிளா உத்கர்ஷா பிரதிஷ்டானுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் கூறியுள்ளார். அரசாங்க ஒப்புதல் இல்லாமல் கூட்டுறவு சங்க நிலத்தை எந்த பொது அறக்கட்டளைக்கும் மாற்ற முடியாது என்றும் புகாரில் சர்தா கூறியுள்ளார். இந்த நிலையில்தான், இந்த ரெய்டு நடந்துள்ளது. பாவனா கவாலியின் உதவியாளர் சையது கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+