மகாராஷ்டிராவில் வெடிக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் பஞ்சாயத்து! அதிரடி நடவடிக்கை எடுத்த காங். தலைமை
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து சில அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக சொந்த கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் அனைவரையும் காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாகும். ஹரியானாவில் வெற்றி குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த காங்கிரஸுக்கு கடைசியில் தோல்விதான் மிஞ்சியது. இதே நிலைமை மகாராஷ்டிராவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனாவுக்கும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கும் தேவையான இடங்களை ஒதுக்கி கொடுத்து பஞ்சாயத்து ஏதும் ஏற்படாமல் சமரச போக்கில் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

ஆனால், கட்சியின் இந்த யுக்தியை புரிந்துக்கொள்ளாத சில அதிருப்தியாளர்கள், எனக்கு சீட் கொடுக்கவில்லை எனவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன் என்று களத்தில் குதித்துள்ளனர். இது கூட்டணியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிருப்தி வேட்பாளர்களை கட்சி தலைமை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது. சஸ்பெண்ட் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர முலாக்கும் இருக்கிறார். இவர் ராம்டெக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல கடோல் தொகுதியில் யாக்ஞவல்கிய ஜிச்கர், கஸ்பா தொகுதியில் கமல், கோப்ரி பச்பகடி தொகுதியில் மனோஜ் ஷிண்டே, பார்வதி தொகுதியில் அபா பாக்யுல் உள்ளிட்டோர் வேட்புமனு செய்திருந்த நிலையில், இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர். இவர்களை தவிர சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மேலும் நீண்டிருக்கிறது.
இந்த சஸ்பெண்ட் குறித்து கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிலதா கூறுகையில், மகா விகாஸ் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து அதிருப்தி வேட்பாளர்களும் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், இந்த வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் தக்க வைக்க வேண்டும் எனில், அதற்காக சில யுக்திகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கூட்டணி கட்சியினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இதற்கு யார் இடையூறாக வந்தாலும், அது வெற்றியை பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது என்று காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications