நாட்டின் ஏற்றுமதி 34.57% சரிவை சந்தித்துள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
மும்பை: நமது நாட்டின் ஏற்றுமதியானது 34.57% சரிவை சந்தித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது,.

அதேநேரத்தில் மக்களின் தேவைகளை அரசுகள் நிறைவு செய்யாமல் போனால் நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகவும் வாய்ப்பிருகிறது என உலக வங்கி எச்சரித்திருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே 21 நாட்கள் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டதால் மிகப் பெரும் நெருக்கடியை அனைத்து துறைகளும் சந்தித்துள்ளன.
இதனால் கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகள் அனைத்து வகையான கடன்களை வசூலிக்க தடை விதிக்கப்படுவதாக கூறியிருந்தார். ஆனால் இதில் பல்வேறு குழப்பங்கள் இப்போதும் தொடருகின்றன.
அதேபோல் ரெப்போ வட்டி விகிதம், குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ஆகியவையும் குறைக்கப்படுவதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுனில் தளர்வுகள் இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு 2-வது முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, நமது நாட்டின் ஏற்றுமதியானது 34.57% சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகவே உள்ளது என்றார் சக்திகாந்ததாஸ்
மேலும் 91% ஏடிஎம்கள் முழுமையாக இயங்கி வருகின்றன; பொதுவாக தொழில்துறை உற்பத்தி 4 மாதங்களில் பெருமளவு குறைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் சக்திகாந்த தாஸ். நமது நாட்டில் தற்போது 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.
அதேபோல் வங்கிகளிடம் இருந்து ரூ50,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50,000 கோடிக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications