கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை.. தடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல்
மும்பை: மும்பை முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் பற்றாக்குறையால் வெள்ளிக்கிழமை காலை முதல் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சிய மையங்கள் மதியம் அல்லது மாலை வேளையில் தடுப்பூசியை நிறுத்திவிடக்கூடும், ஏனெனில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய தடுப்பூசி பங்கு வேகமாக குறைந்து வருகிறது என்று மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.

இதற்கிடையில், மும்பை வெள்ளிக்கிழமை 1.80 லட்சம் கோவிட் -19 தடுப்பூசிகள் மகாராஷ்டிரா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) நிர்வாக சுகாதார அதிகாரி மங்கள கோமரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள 120 மையங்களில் 75, முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில், உள்ள தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி மருந்துகள் கிடைக்காததால் வெள்ளிக்கிழமை காலை முதல் தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய தகவல்கள் சரி இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி டோஸ் வழங்கப்படுகின்றன என்று அமித் ஷா கொல்கத்தாவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications