மகா. மாஜி முதல்வர் பட்னாவிஸுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: அமைச்சர் நவாப் மாலிக் பகீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக அம்மாநில அமைச்சரும் மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இதற்கான ஆதாரங்களாக போட்டோக்களையும் நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார்.

மும்பையில் இருந்து கடந்த 3-ந் தேதி கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அக்கப்பலில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஆர்யன்கான் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.

இந்த விவகாரம்தான் கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே, திட்டமிட்டே பொய் வழக்குகளை பதிவு செய்வதாக அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்குகளும் சமீர் வான்கடே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

பாஜக தூண்டுதலும் சமீர் வான்கடேவும்

பாஜக தூண்டுதலும் சமீர் வான்கடேவும்

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலால்தான் சமீர் வான்கடே பொய் வழக்கு போடுகிறார்; மும்பை பாலிவுட்டை உத்தரப்பிரதேசவூட்டாக மாற்றும் சதித் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த வழக்குகள் எல்லாம் என இடைவிடாமல் குற்றம்சாட்டி வருகிறார் நவாப் மாலிக். இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் குறித்தும் அதிரடி குற்றச்சாட்டுகளை நவாப் மாலிக் முன்வைத்துள்ளார்.

பொய் வழக்குகள்

பொய் வழக்குகள்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நவாப் மாலிக் கூறியதாவது: முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில்தான் போதைப் பொருள் கடத்தல் மகாராஷ்டிராவில் தலைதூக்கியது. பட்னாவிஸ்தான் சமீர் வான்கடேவை மும்பை ஜோனல் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமித்தார். பட்னாவிஸ் தூண்டுதலில்தான் பொய்யான வழக்குகளை ஜோடித்து வருகிறார் சமீர் வான்கடே.

பட்னாவிஸ்- போதைப் பொருள் கடத்தல் கும்பல் லிங்க்

பட்னாவிஸ்- போதைப் பொருள் கடத்தல் கும்பல் லிங்க்

தேவேந்திர பட்னாவிஸுக்கும் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயதீப் ரானாவுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கான போட்டா ஆதாரங்களை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். பட்னாவிஸின் மனைவி அம்ரிதா பட்னாவிஸ் ஆல்பத்துக்கு பைனான்சியரே ஜெயதீப் ரானாதான். இருவரும் இணைந்து போஸ் கொடுக்கும் போட்டோக்களும் இருக்கின்றன. சமீர்வான்கடேதான் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டவர். மும்பை போதைப் பொருள் கடத்தலின் சூத்திரதாரியே சமீர் வான்கடேதான். இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.

பட்னாவிஸ் பதிலடி

பட்னாவிஸ் பதிலடி

இதனிடையே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளித்த பட்னாவிஸ், நவாப் மாலிக்குக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு உள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை தீபாவளி பண்டிக்கைக்குப் பின்னர் வெளியிடுகிறேன். ஆட்டத்தை தொடங்கி வைத்தது அவர்தான்.. என்ன நடக்கிறது என தீபாவளிக்கு பிறகு பாருங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+