முதல்வர் பதவியில் 50:50.. சிவசேனாவுக்கு அமித்ஷா உறுதி அளித்தாரா?.. பட்னவீஸ் விளக்கம்
மும்பை: முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு பாஜக எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளை கொண்டது. பெரும்பான்மைக்கு மொத்தம் 145 இடங்கள் தேவை.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி வெற்றுள்ளது. எனவே எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சிவசேனா எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த இரு நாட்களில் முதல்வர் பதவியை சரிசமமாக பிரிக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி செய்ய வேண்டும் என சனிக்கிழமை நடந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவசேனா மறுப்பு
ஆனால் இதை ஏற்க பாஜக மறுக்கிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக இறங்கி வந்துள்ளது. ஆனால் இதை ஏற்க சிவசேனா மறுத்து முதல்வர் பதவிதான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது.

சிவசேனா
தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கும் போது மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி 50:50 வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளதாக சிவசேனா கூறி வருகிறது. அதோடு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

திறமை
இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறுகையில் பாஜக தலைமையிலான அரசு அமையும் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியை ஸ்திரத்தன்மையுடனும் திறமையுடனும் பாஜக வழி நடத்தியது.

கோரிக்கை
முதல்வர் பதவி குறித்து சிவசேனா எந்த வித கோரிக்கையையும் வைக்கவில்லை. முதல்வர் பதவி 50:50 வழங்குவது குறித்து எங்கள் கட்சி தலைவர் அமித்ஷாவும் சிவசேனாவுக்கு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என என்னிடம் கூறியுள்ளார். எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு நானே மகாராஷ்டிரத்தின் முதல்வராக செயல்படுவேன் என பட்னவீஸ் தெரிவித்துள்ளார். இதனால் துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்குமா இல்லை கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications