ஷிண்டே VS உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் மாஸ் காட்டியது யார்? இருவரும் வென்ற தொகுதிகள் எத்தனை?
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டும் 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெறும் கட்சியாக மீண்டும் உருவாகி உள்ள நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் வேட்பாளர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றனர்? யார் அதிக இடங்களில் வென்றனர்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில் ஆளும் கட்சி கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக களமிறங்கின. மறுபுறம் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கேரவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பாஜக கூட்டணி மொத்தமாக 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வாகை சூடி அசத்தி உள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சியான ‛மகா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி அமைத்ததில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி தான் என்பது மகாராஷ்டிராவில் உறுதியாகி உள்ளது.
மேலும் இந்த தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் 57 வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களில் வாகை சூடியுள்ளது. இதன்மூலம் கட்சி மற்றும் சின்னத்தை உத்தவ் தாக்கரேவிடம் இருந்து ஏற்கனவே பிடுங்கிய ஏக்நாத் ஷிண்டே தற்போது உத்தவ் தாக்கரேவை மீண்டும் தேர்தல் அரசியலில் வீழ்த்தி உள்ளார்.
இருப்பினும் இந்த முறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி என்பது கிடைக்காது. பாஜக அதிக இடங்களில் வென்றதால் அந்த கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வராக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தான் இந்த தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்ற நிலையில் , சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார் தொடங்கிய நிலையில் அஜித் பவார் தனியாக பிரிந்து பாஜக கூட்டணியில் இணைந்தார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயர் அஜித்பவாரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் சரத்பவாரை அணியை விட அஜித் பவார் தரப்பு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications