மும்பையில் மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு..செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம்.. மக்கள் அச்சம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் அழுகிய நாற்றம் பரவியதாக தகவல்கள் எழுந்தன. இதுதொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மும்பையின் கோவண்டியில் வைட்டமின் தயாரிக்கும் அமெரிக்காவின் மருந்து நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று இரவு 9.50 மணிக்கு அந்த நிறுவனத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து மும்பை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோட்காபார், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அழுகிய நாற்றம் வீசுவதாக மும்பை தீயணைப்பு துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அந்த இடங்களுக்கு சென்ற அவர்களுக்கும் அழுகிய நாற்றம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்திலிருந்து கேஸ் கசிவிற்கான உடனடி காரணம் என்னவென தெரியவில்லை. அந்த பகுதிகளில் ஜன்னல், கதவுகளை மூடியபிறகும் துர்நாற்றம் வீசியதாக புகார் அளித்தனர்.
துர்நாற்றத்தை போக்க 17 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. செம்பூர், கோட்காபார், போவாய், அந்தேரி, மன்குர்து ஆகிய பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் ஈரத்துணியை நனைத்து முகத்தில் கட்டிக் கொள்ளவும் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஞ்ச வேண்டாம் என்றும் மற்றவர்களையும் அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

Recommended Video
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செம்பூரில் உள்ள ரசாயன உரத் தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டது. ஆனால் இது எங்கிருந்து கசிந்தது என தெரியவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவம் சுமார் 9 மாதங்கள் கழித்து தற்போது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications