மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்.. சுயேட்சையாக நின்று வெற்றி
மும்பை: மகாராஷ்டிராவில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று ரிசல்ட் வெளியாகி வருகிறது. ஜால்னா மாநகராட்சி தேர்தலில், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிரிகாந்த் பங்கர்கர், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
ஜால்னா மாநகராட்சியில் 13ம் எண் வார்டில் பங்கர்கர் களமிறங்கியிருந்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்த வார்டில் வேட்பாளரை நிறுத்தாததால், பலமுனைப் போட்டி நிலவியது. இதில் பங்கர்கர், பாஜக மற்றும் பிற வேட்பாளர்களை 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

கொலையும் வழக்கும்
கௌரி லங்கேஷ் கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பங்கர்கரின் வெற்றி வந்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "எனக்கு எதிராக இதுவரை எந்தத் தண்டனையும் இல்லை, சட்ட போராட்டம் தொடர்கிறது" என்று கூறியிருக்கிறார். ரிசல்ட் வெளியான நிலையில், பங்கர்கர் தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ஷேராகியிருந்தது. இந்த வீடியோக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்பது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளன.
கொலை வழக்கில் ஜாமீன்
பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதியன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு, அரசியல் சகிப்புத்தன்மையின்மை பற்றிய பரந்த விவாதத்தையும் கிளப்பியது. இந்த வழக்கில் பங்கர்கர் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்.4ம் தேதி ஜாமீன் வழங்கியது.
பயங்கரவாத எதிர்ப்புப் படையால் கைது
பங்கர்கர் 2001 முதல் 2006 வரை பிரிக்கப்படாத சிவசேனாவின் ஜால்னா நகராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2011-ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் வலதுசாரி இந்து ஜனஜாக்ருதி சமிதியில் சேர்ந்தார். 2018ம் அண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதலுக்குப் பிறகு, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் பங்கர்கர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications