யார் உங்கள ட்வீட் பண்ண சொன்னது...சச்சின், லதா மங்கேஷ்கருக்கு ராஜ் தாக்ரே கேள்வி
மும்பை : வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கரை மத்திய அரசு ட்வீட் பண்ணும்படி கேட்கவில்லையே என நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து இந்திய பிரபலங்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 3 ம் தேதியன்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட ட்வீட்டில், இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டு சக்திகள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும், இதில் பங்கேற்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்கள் அறிவார்கள். அவர்கள் இந்தியாவிற்காக முடிவு செய்யாதவர்கள். நாட்டிற்காக ஒன்றுபட்டு நிற்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அதே நாளில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட லதா மங்கேஷ்கர், இந்தியா புகழ்பெற்ற நாடு. நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். எந்த பிரச்னை வந்தாலும், நாடு ஒருமையுடன் எதிர்கொள்வோம். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வை காண்போம் என குறிப்பிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கரின் கருத்து பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட ராஜ் தாக்ரே, சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் போன்ற பெரிய பிரபலங்களை தங்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிடும்படி மத்திய அரசு கேட்கவேயில்லை. அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அக்ஷய் குமார் போன்றவர்களே இது போன்ற பணிக்கே போதுமானவர்கள் என்றார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பேசி வருவதை போன்று, மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டெண்டுல்கள், லதா மங்கேஷ்கர் போன்றோரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications