மகாராஷ்டிராவை மிரட்டும் ஜிபிஎஸ் நரம்பியல் நோய்.. அறிகுறிகள் என்ன? பரவக் கூடியதா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் எனப்படும் "கிலான் பாரே சின்ட்ரோம்" நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. சோலாப்பூரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 111 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் இருவர் கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜிபிஎஸ் நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன என்பவை குறித்து இங்கே பார்க்கலாம்.
ஜி.பி.எஸ்., எனப்படும் 'கிலன் பா சிண்ட்ரோம்' ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு ஆகும். இதன் பாதிப்பு மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நோய் பாதிப்பினால் புனேவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாநிலத்தில் 111 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அசுத்தமான தண்ணீரால் ஜிபிஎஸ் பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் டாக்டர்கள் குழுவினர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் இடம் பெற்ற இந்தக் குழுவினர் புனேயில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜிபிஎஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கமலா நேரு மருத்துவமனையில் 45 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
ஜிபிஎஸ் நோய் என்றால் என்ன?
லன் பா சிண்ட்ரோம் ஒரு அரியவகை நரம்பியல் பாதிப்பினால் தசைகளில் திடீர் உணர்வின்மை மற்றும் பலவீனம் இரண்டையும் ஏற்படுத்துகிறது. கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கும்.
இதன் காரனமாக கால்கள் அல்லது கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகள் இந்த ஜிபிஎஸ் பரவலுக்கு பொதுவான காரணமாக உள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது பலவீனமாக்கும். இந்த நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை
மாசடைந்த குடிநீர், சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியா தொற்று உள்ளிட்டவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கை, கால்களில் திடீர் பலவீனம் உள்ளிட்டவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். வயதானவர்கள், இளம் வயதினர் என அனைத்து தரப்பினரையும் ஜிபிஎஸ் நோய் தாக்கும். இது ஒரு பெருந்தொற்றாக மாறாது. பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை மூலமாக முழுவதும் குணம் அடைந்து விடுவார்கள்.
குடிநீரை காய்ச்சி குடித்தல், காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பிறகு சாப்பிடுதல், இறைச்சி உணவுகளை முறையாக சமைத்து சாப்பிடுதல், பச்சையாக அல்லது அரைகுறையாக சமைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது. குறிப்பாக முட்டை, மீன் உணவுகள் ஆகியவற்றை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை நோய் தடுப்பு முறைகளாக அறிவித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications