மும்பையில் ஷாக்... 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்தப்பட்டனர்!
மும்பை: மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. சுமார் 200 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். மும்பையில் கொரோனா உக்கிரமாக இருந்து வருகிறது.

மும்பையில் கொரோனாவால் 132 பேர் நேற்று வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
மொத்தம் 171 பத்திரிகையாளர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களை சோதனைக்குட்படுத்திக் கொண்டனர். கடந்த 16,17 ஆகிய நாட்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் மொத்தம் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் விஜய் கபாலே கூறியுள்ளார். மேலும் இவர்கள் அனைவருக்குமே கொரோனா அறிகுறியே இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது கொரோனா பாதித்த 53 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த 53 பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையிலும்..
சென்னையிலும் சில பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செய்தியாளர்கள் சந்திப்புகளையே நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications