இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
மும்பை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) நிதி ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியன் வங்கி தனது "மைக்ரோ கிரெடிட் கார்டு" திட்டத்தை மும்பையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மைக்ரோ கிரெடிட் கார்டுகளை வழங்கினார்.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், இந்த திட்டம் சிறு தொழில்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக, சிறு தொழில் முனைவோர், கிராமப்புற தொழில்கள் மற்றும் தன்னிறைவு தொழில்களை மேற்கொள்ளும் மக்களுக்கு எளிதில் கடன் வசதி கிடைக்க இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டம் ரூபே தளத்தில் செயல்படவுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு விரைவான மற்றும் சுலபமாக கடன் பெறும் வகையில் உருவாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக எம்எஸ்எம்இ துறைக்கான கடன் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications