பார்ட்டியில் முதலாளியுடன் உறவு கொள்ள சொன்ன கணவன்.. மறுத்த மனைவிக்கு ஸ்பாட்டிலேயே முத்தலாக்!
மும்பை: இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே கிளம்பி வருகின்றன. அதற்கேற்றார் போல் இப்போதும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்து, மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சோஹைல் ஷேக்.. இவருக்கு 45 வயதாகிறது.. சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

கருத்து வேறுபாடு: ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. ஒருகட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்யவும் முடிவு செய்து, கோர்ட்டை நாடியிருக்கிறார்கள். இந்த விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, கடந்த ஜனவரியில் 2வது கல்யாணம் செய்து கொண்டார் சோஹைல். சத்ரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் இந்த 2வது திருமணம் நடந்துள்ளது..
ஆரம்பத்தில் 2வது மனைவிக்கு எந்த தொந்தரவும் தராத சொஹைல், அடுத்த சில மாதங்களிலேயே ரூ.15 லட்சம் ரூபாய் இருந்தால்தான், முதல்மனைவியை டைவர்ஸ் செய்ய முடியும் என்று கேட்டு சித்ரவதை செய்ய துவங்கியிருக்கிறார்.. ரூ.15 லட்சத்தை பெற்றோரிடம் இருந்து உடனே வாங்கி வருமாறும் சோஹைல் ஷேக் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
ஆபீஸ் பார்ட்டி: இந்நிலையில் ஒருநாள், தன்னுடைய ஆபீசில் பார்ட்டி நடப்பதாக கூறி, மனைவியை அழைத்துள்ளார்.. தனக்கு விருப்பமில்லை என்று அந்த பெண் சொல்லியும், கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளார்.. பார்ட்டி முடிந்ததுமே, மனைவியை தன்னுடைய கம்பெனி ஓனருக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் உறவு வைத்துக்கொள்ளும்படியும் நெருக்கடி தந்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், முதலாளியுடன் தன்னால் நெருக்கமாக இருக்க முடியாது என்று சொல்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 15 லட்சம் பணம் கேட்டும் தராத ஆத்திரத்தில் இருந்த சோஹைல் ஷேக், கம்பெனி முதலாளியுடனும் நெருக்கமாக இருக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கேயே மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியிருக்கிறார். ஆனால், கொடூரமாக தாக்கப்பட்டபோதும், கணவனின் விருப்பத்துக்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.
தலாக்: இதனால், உச்சக்கட்ட எரிச்சலடைந்த சொஹைல், இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்ய 3 முறை "தலாக்" என்று சொல்லி, விவாகரத்து செய்தார்.. அத்துடன், அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தார்..
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் கண்ணீர் விட்ட அந்த பெண், கல்யாண் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தன்னுடைய கணவர் மீது புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்...!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications