மும்பை ”இந்தியா” கூட்டணி கூட்டம்: ஆக.31-ல் சின்னம் வெளியீடு- என்னவா இருக்கும்?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தின் முதல் நாளில் "இந்தியா" கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது.

மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மமதா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்கனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சில புதிய கட்சிகள் இந்தக் கூட்டணில் இணைகின்றன. உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் ஒரு அரசியல் கட்சி மும்பை கூட்டத்தில் இணைய உள்ளது.
மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், பொது செயல் திட்டம், தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும். மேலும் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற விவாதமும் நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மும்பை "இந்தியா" கூட்டணி கூட்டம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: "இந்தியா" கூட்டணிக்கான பொது சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் ஆகஸ்ட் 31-ந் தேதி இரவு 7 மணிக்கு இந்த சின்னம் வெளியிடப்படும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications