ஷில்பா ஷெட்டி - கணவர் ராஜ் குந்த்ராவுக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. ரூ.60 கோடி மோசடி வழக்கில் அதிரடி
மும்பை: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் பெயர் ராஜ் குந்த்ரா. தற்போது ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா உடன் மும்பையில் வசித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன்பிறகு இந்த நிறுவனம் மூடப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நிறுவனம் மூடுவிழா கண்டது.
முன்னதாக இந்த தொழிலுக்காக கடந்த 2015 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொழதிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடம் ரூ.60 கோடி வரை வாங்கி உள்ளனர். தங்களின் தொழிலை விரிவுப்படுத்த உள்ளதாக கூறி பணம் வாங்கி உள்ளனர். ஆனால் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் அதன்பிறகு அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி ரூ.60 கோடி பணத்தை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொழிலில் முதலீடு செய்யாமல் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் கோத்தாரி பணம் கேட்டபோது ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் சொன்னது போல் பணத்தை அவர்கள் வழங்கவில்லை.
இதுதொடர்பாக தீபக் கோத்தாரி சார்பில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அந்த புகாரை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் மறுத்தனர். தங்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இருப்பினும் தொழிலதிபர் தீபக் கோத்தாரியின் புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக இருவருக்கும் எதிராக போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்ல முடியாது. இதனால் ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிரான பிடி இறுகி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications