அஜித் பவார் மீதான ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் புகார்: 9 முக்கிய வழக்குகள் முடித்து வைப்பு!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மீதான ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கில் தொடர்புடைய 9 முக்கியமான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் முடித்து வைத்துள்ளது. ஆனால் இந்த 9 வழக்கிற்கும் அஜித் பவார் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளனர். இன்று பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஆனால் அஜித் பவார் பொறுப்பேற்கவில்லை. மேலும் இப்புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இந்நிலையில் இன்று அஜித் பவார் மீது முந்தைய பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட ரூ70,000 கோடி நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் 9 முக்கிய வழக்குகள் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 9 வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என கூறி போலீசார் இதனை முடித்து வைத்துள்ளனர்.
ஆனால் இந்த 9 வழக்கிற்கும் அஜித் பவார் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. இதில் மொத்தம் 24 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை எப்போதும் நடக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூறியுள்ளது.
நீர்ப்பாசன ஊழல் பின்னணி
1999-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு கால கட்டங்களில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அஜித் பவார். அப்போது விதர்பா பகுதிக்கான நீர்ப்பாசன திட்ட ஒப்பந்தங்களில் ரூ70,000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பதுதான் வழக்கு. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமது எம்.எல்.ஏ. பதவியையும் அஜித் பவார் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications