மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: 7,995 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்- இன்று பரிசீலனை
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் 7,995 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. 7995 பேர் தாக்கல் செய்த 10,905 வேட்பு மனுக்களில் தகுதியில்லாத மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே வேட்பு மனுத் தாக்கல் கடைசி நிமிடம் வரை தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதேபோல எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளிடையேயும் கடைசி நிமிடம் வரை தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் நிலவியது. இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு அணிகளிலும் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.












Click it and Unblock the Notifications