"சனாதன தர்மத்தை அவமதித்தால் விடமாட்டோம்.." மகாராஷ்டிராவில் பொங்கிய பவன் கல்யாண்
மும்பை: சனாதன தர்மத்தை பின்பற்றும் நாங்கள் மதத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுப்போம். ஆர்.எஸ் எஸ் ஆதரவு இல்லாமல் இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்து இருக்க முடியாது என்று பவன் கல்யாண் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை ஆதரித்து பவன் கல்யாண் பிரசாரம் மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக , சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. பிரசாரம் இன்றுடன் ஓய உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தீவிர பிரசாரம் மேற்கோண்டு வருகிறார். அந்த வகையில் பல்லார்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:- சனாதன தர்மத்தை பின்பற்றும் நாங்கள் மதத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இல்லாமல் இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்து இருக்க முடியாது. சிவாஜி மன்னர் மற்றும் பாலாசாகேப் தாக்கரேவை ஊக்கமாக எடுத்துக்கொண்டுதான் எனது கட்சி தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் சனாதன தர்மத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என நான் மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தியா தற்பொது பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக உள்ளது. மூன்றாவது இடத்திற்கு கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையாக உழைக்கிறது. இந்த வளர்ச்சி தடைபட்டு விடக்கூடாது. எனவே, அனைவரும் தங்கள் வாக்கினை சரியான வேட்பாளருக்கு பதிவு செய்ய வேண்டும்.
தேசத்தை பிளவுபடுத்த பலர் விரும்புகிறார்கள். எனினும், நாம் ஒற்றுமையாக இருந்து தேசத்தை வலுப்படுத்துவதோடு உள்ளூர் மக்களின் கலாசாரத்தை மதிக்க வேண்டும்" என்றார். ஆந்திராவில் ஜனசேனா கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் பவன் கல்யாண், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார்.
சந்திரபாபு நயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார். தீவிர இந்துத்துவா ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்ளும் பவன் கல்யாண், தனது கட்சியில் சனாத தர்மத்தை பாதுக்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்குவதாக கூறியிருக்கிறார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications