மகாராஷ்டிரா: புதிய அரசு நாளை பதவியேற்பு: மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 முதல்வர்கள் பங்கேற்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 10 மத்திய அமைச்சர்கள் மற்றும் 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 2,000 பேர் பங்கேற்கும் வகையில் அசத்தலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் முதல்வர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக அணி வெற்றிக்கு முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் காரணம்; அவரது தலைமையில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது; ஆகையால் ஏக்நாத் ஷிண்டேவை அங்கீகரித்து அவருக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்பது சிவசேனாவின் கோரிக்கை. ஆனால் பாஜக இதனை நிராகரித்தது.
இதில் அதிருப்தி அடைந்த ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும் உள்துறையும் ஒதுக்க வேண்டும்; சிவசேனாவுக்கு சபாநாயகர் பதவி தர வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அடம்பிடித்தார். இதனால் சிவசேனா- பாஜக இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே கடும் கோபமடைந்தார். இந்த கோபத்தின் வெளிப்பாடாக, பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளை சிவசேனா நடத்தவில்லை.
ஆனாலும் மகாராஷ்டிராவில் புதிய அரசு வியாழக்கிழமை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. புதிய முதல்வர், அமைச்சர்கள் விவரங்கள் இறுதி செய்யப்படாமலேயே இந்த அறிவிப்பு வெளியானது. இந்த பின்னணியில் நேற்று ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இன்னொரு பக்கம், முக்கியமான துறைகளை பெறுவதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தார்.
இந்த பின்னணியில் மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும் சுமார் 2,000 முக்கிய பிரமுகர்களும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மும்பையில் நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதால் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications