மகாராஷ்டிரா: பட்னாவிஸ்தான் முதல்வர்-ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக ரெடி..இழுபறி நீடிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர்..இதனை சிவசேனா தலைவரான இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும் தேவேந்திர பட்னாவிஸுக்கு கீழ் துணை முதல்வராக பணிபுரிய விருப்பம் இல்லை எனில் மத்திய அமைச்சர் பதவியை ஷிண்டேவுக்கும் தர தயாராக இருப்பதாகவும் பாஜக தரப்பு பேரம் பேசியிருப்பதாக மத்திய அமைச்சர் ராம்ஸ்தா அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 230 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. மகாராஷ்டிரா சட்டசபையில் பிரதான எதிர்கட்சியே இல்லை என்ற நிலைமை உருவாகி உள்ளது.

இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பாஜக கூட்டணியால் மகாராஷ்டிராவில் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியாத இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள தகராறுதான். பாஜகவைப் பொறுத்தவரையில் அதிக இடங்களில் வென்றதால் இந்த முறை முதல்வர் பதவியை விட்டுத் தருவதாகவில்லை; தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்கிறது; ஆனால் சிவசேனா தலைவ ஏக்நாத் ஷிண்டே, பீகாரில் குறைவான இடங்களில் வென்ற நிதிஷ்குமாரை பாஜக முதல்வராக ஏற்றுக் கொண்டிருக்கிறதுதானே.. அப்படியானால் நானே தொடர்ந்தும் முதல்வராக நீடிக்கிறேன் என அடம் பிடிக்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவரான அஜித் பவாரோ, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய ஆட்சி அமையாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை உருவானது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு இடைக்கால முதல்வராக்கப்பட்டார். இந்த நிகழ்வால் அரசியல் சாசன சிக்கல் எழவில்லை.
இதனிடையே முதல்வர் பதவி விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்படுத்த ஷிண்டேவுடன் பாஜக தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்கிறது பாஜக. ஷிண்டேவோ விட்டுத் தருவதாக இல்லை. அஜித்பவார் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். தேவேந்திர பட்னாவிஸ் கீழ் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பணியாற்ற விரும்பவில்லை எனில் மத்திய அமைச்சர் பதவியை தரவும் பாஜக தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு உருவாகும் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications