மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் உள்துறை எங்களுக்குதான்.. ஷிண்டே சிவசேனா பிடிவாதம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் சிவசேனாவுக்கு உள்துறை இலாகாவை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி பிடிவாதம் பிடிப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 5-ந் தேதி புதிய அரசு பதவியேற்கும் என பாஜக அறிவித்த நிலையில் இடைக்கால முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே , உள்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை கேட்டு அடம்பிடித்து வருவதால் அரசியல் குழப்பம் தொடருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் உடனடியாக மகாயுதி கூட்டணியால் புதிய அரசு அமைக்க முடியவில்லை. முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தமக்கு மீண்டும் முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலையிட்டு ஏக்நாத் ஷிண்டேவை சமாதானப்படுத்தினார். பின்னர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு மும்பை திரும்பிய ஏக்நாத் ஷிண்டே, தமக்கு உடல்நலன் சரியில்லை என கூறி சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார். இது தொடர்பாக சிவசேனா வட்டாரங்கள் கூறுகையில், பாஜகவுக்காக முதல்வர் பதவியையே விட்டுத் தந்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. துணை முதல்வர் பதவி எங்களுக்கு தரப்படுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் எந்த துறைகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்பதுதான் முக்கியமானது. துணை முதல்வர் பதவி, உள்துறை இலாகா, சபாநாயகர் பதவி ஆகியவற்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜகவிடம் கேட்டுள்ளோம். இதற்கு மேலும் எங்களால் இறங்கி வர இயலாது என தெரிவித்துள்ளன.
இதனிடையே பாஜக தலைமையிலான புதிய அரசு வரும் 5-ந் தேதி பதவியேற்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தங்களுக்கு ஒதுக்க பாஜக மறுத்தால் ஆட்சியில் பங்கேற்காமல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் முடிவை சிவசேனா எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன மும்பை அரசியல் வட்டாரங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications