சிவசேனாவுடன் சிக்கல் இல்லை- தேசியவாத காங்-க்குதான் முதல்வர் பதவி- காங். அடம்பிடிப்பதால் இழுபறி?
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)- சிவசேனா அரசில் முதல்வர் பதவியை என்சிபிக்குத்தான் தர வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதுதான் இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.
பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளின் போது சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனா. இதனால் அந்த கூட்டணியே முறிந்தது.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது சிவசேனா. அப்போது சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என்பதில் அக்கட்சி திட்டவட்டமாக இருந்தது.

ஆளுநர் நிராகரிப்பு
ஆனால் காங்கிரஸிடம் இருந்து ஆளுநர் கொடுத்த கெடு முடியும் வரை எந்த சிக்னலும் வரவில்லை. அதனால் மேலும் 3 நாட்கள் தருமாறு ஆளுநரிடம் அவகாசம் கேட்டது சிவசேனா.

கனவு நழுவியது
ஆனால் ஆளுநர் இதனை நிராகரித்தார். இதனால் சிவசேனாவின் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. இதில் அக்கட்சி கடும் அதிர்ச்சி அடைந்தது.

காங். குழப்பம்
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், 56 இடங்களை வென்ற சிவசேனா முதல்வர் பதவியில் உறுதியாக இருக்கிறது. சிவசேனாவை ஆதரிப்பதில் எங்கள் கட்சியில் எதிர்ப்பும் இருக்கிறது.

காங்கிரஸ் நிபந்தனை
இத்தனை எதிர்ப்புகளையும் சமாளிக்கும் வகையில் 54 இடங்களில் வென்ற என்சிபிக்கு முதல்வர் பதவியை சிவசேனா விட்டுத்தர வேண்டும் என நிபந்தனை விதித்தோம். அதாவது என்சிபி ஆட்சிக்குத்தான் காங்கிரஸ் ஆதரவு தருகிறது; சிவசேனாவும் அதில் இடம்பெற்றிருக்கிறது என்கிற சூழ்நிலைதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.

விடை தெரியா கேள்விகள்
இதற்கு சிவசேனா இதுவரை உடன்படவில்லை. இதனால்தான் இழுபறி நீடிக்கிறது என்கின்றன. முதல்வர் பதவி குறித்து என்சிபியும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் முதல்வர் பதவி என்சிபிக்குத்தான் என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமாக இருக்கிறது.
என்சிபி ஆட்சி அமைக்க ஆளுநர் கொடுத்த முடிய இன்னும் 8 மணிநேரம்தான் உள்ளது. அதற்குள் சிவசேனா விட்டுக் கொடுக்குமா? அல்லது சுழற்சி முறையிலாவது முதல்வர் பதவி கொடுங்கள் என இறங்கி வருமா? அதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? என்கிற கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டிய நிலை உள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications