மகாராஷ்டிராவில் தொடரும் இழுபறி: பாஜகவின் ஆட்சியில் பங்கேற்காவிட்டால் சிவசேனா உடையுமோ?
Recommended Video
மும்பை: பாஜக தலைமையிலான ஆட்சியில் சமமான அதிகாரப் பகிர்வை சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலை நீடித்தால் சிவசேனாவின் 24 புதிய எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் 161 தொகுதிகளில் வென்றுள்ளன. பாஜக 105, சிவசேனா 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

பாஜக தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்படும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி சமமான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துகிறது சிவசேனா. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
இதனால் புதிய அரசு அமைவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில்தான் சிவசேனாவில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தி பிரிண்ட் இணையதளத்துக்கு அளித்த தகவலில், மகாராஷ்டிராவில் ஆட்சியில் பங்கேற்காமல் இருப்பது என உத்தவ் தாக்கரே முடிவு செய்தால் சிவசேனாவின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன.
மேலும் தி பிரிண்ட் இணையதளத்துக்கு பேட்டியளித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநில அமைச்சருமானவரும், ஆட்சியில் பங்கேற்க உத்தவ் தாக்கரே விரும்பாவிட்டால் குறைந்தது 24 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவார்கள்; எதிர்க்கட்சி வரிசையில் அமர நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் சிவசேனாவின் கோரிக்கைகளை பாஜ பரிசீலித்தாலும் பிற கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆகையால் சிவசேனா எம்.எல்.ஏகள் கட்சி தாவுவதின் மூலமும் சுயேட்சைகள் ஆதரவுடனும் பாஜக ஆட்சி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications