மகாராஷ்டிராவில் அடங்காத பரபரப்பு- வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கிராமத்தில் சரத்பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த ஒரு கிராமமே முடிவு செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மார்காவாடி கிராம மக்களின் இந்த முடிவு அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மார்காவாடி கிராம மக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து பேசியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. தேர்தல் கருத்து கணிப்புகளை மீறி பிரம்மாண்ட வெற்றியை பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளால் இப்போதுவரை ஜீரணிக்க முடியவில்லை.

மகாராஷ்டிரா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் பாஜக இத்தகைய வெற்றியைப் பெற்றது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சோலாப்பூர் மாவட்டத்தின் மார்க்காவாடி கிராம மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், வாக்குச் சீட்டு முறையில் மாதிரி தேர்தல் நடத்தவும் இந்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசு அதிகாரிகளோ இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுத்தனர். அத்துடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த பின்னணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்காவடி கிராமத்துக்கு நேற்று நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். இது புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சரத்பவாரின் இந்த சந்திப்பை பாஜக மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications