மகாராஷ்டிராவில் அடங்காத பரபரப்பு- வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கிராமத்தில் சரத்பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த ஒரு கிராமமே முடிவு செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மார்காவாடி கிராம மக்களின் இந்த முடிவு அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மார்காவாடி கிராம மக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து பேசியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. தேர்தல் கருத்து கணிப்புகளை மீறி பிரம்மாண்ட வெற்றியை பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளால் இப்போதுவரை ஜீரணிக்க முடியவில்லை.

மகாராஷ்டிரா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் பாஜக இத்தகைய வெற்றியைப் பெற்றது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சோலாப்பூர் மாவட்டத்தின் மார்க்காவாடி கிராம மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், வாக்குச் சீட்டு முறையில் மாதிரி தேர்தல் நடத்தவும் இந்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசு அதிகாரிகளோ இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுத்தனர். அத்துடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த பின்னணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்காவடி கிராமத்துக்கு நேற்று நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். இது புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சரத்பவாரின் இந்த சந்திப்பை பாஜக மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications