மகாராஷ்டிராவில் தொடர்ந்து பயங்கரமாக தாக்கி வரும் கொரோனா- 24 மணிநேரத்தில் 3,752 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்குநாள் உக்கிரமாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3, 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரேநாளில் 3,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

1,20,504 பேருக்கு பாதிப்பு

1,20,504 பேருக்கு பாதிப்பு

இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 1,20,504 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,751 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இதுவரை மொத்தம் 60,838 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தாராவியில் குறைவு

தாராவியில் குறைவு

தமிழர்கள் அதிகம் வாழும் மும்பையின் தாராவி பகுதியில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியானது. தாராவியில் மட்டும் மொத்தம் 2134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 78 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

கர்நாடகாவில் 210 பேர்

கர்நாடகாவில் 210 பேர்

கர்நாடகாவில் இன்று 210 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,944 ஆக உயர்ந்திருக்கிறது. கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கேரளாவில் மேலும் 97 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் மேலும் 97 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் கொரோனாவுக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. கேரளாவில் மொத்தம் 2,794 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+