மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா; 198 பேருக்கு ஓமிக்ரான் உறுதி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளில் மட்டும் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதி உச்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென பல மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மொத்தம் 5368 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் 3671 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

மும்பையில் மட்டும் 190 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாகேப் தொராட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து தெலுங்கானாவில் ஓமிக்ரான் பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 1,313 பேருக்கு கொரோனா உறுதியானது. டெல்லியில் நேற்று 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 1,000-த்தை தாண்டி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 97.












Click it and Unblock the Notifications