குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டாம்.. நாங்கள் முடிவை அறிவிப்போம்.. மகாராஷ்டிரா காங். அதிரடி!
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க கூடாது, அங்கு நிலையான ஆட்சி அமையும் வகையில் காங்கிரஸ் முடிவு எடுக்கும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேட்டி அளித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க கூடாது, அங்கு நிலையான ஆட்சி அமையும் வகையில் காங்கிரஸ் முடிவு எடுக்கும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேட்டி அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது. சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால் பாஜக இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.
இன்று மாலை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கை அம்மாநில காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக சந்தித்தார்கள். எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று இவர்கள் சந்திப்பில் கூறினர்.

என்ன பேட்டி
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரியும். அவர்களுக்கு சிவசேனா ஆதரவு கிடையாது. காங்கிரஸ் கட்சி அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இன்னும் முடிவு
நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆட்சி அமைக்க உரிமை கோருவதா என்று முடிவு செய்யவில்லை. இதுகுறித்து கூட்டம் நடத்தி முடிவு செய்வோம். எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

யாருடைய ஆட்சி
மகாராஷ்டிராவில் உடனே குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர கூடாது. நாங்கள் எங்கள் முடிவை விரைவில் எடுக்க உள்ளோம். காங்கிரஸ் மேலிடத்தில் கேட்டு, நிலையான அரசு அமையும் வகையில் ஒரு முடிவை எடுப்போம், என்று அசோக் சவான் குறிப்பிட்டு இருக்கிறார்.

கூட்டணி வைக்குமா?
இதனால் தற்போது காங்கிரஸ் சிவசேனா உடன் கூட்டணி வைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனாவுடன் ஏற்கனவே காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. நாளை மீண்டும் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications