பாலியல் தொழிலில் 10ம் வகுப்பு மாணவி.. பணத்துக்காக விபசாரத்தில் தள்ளிய கொடூர தாய்.. நடுங்க வைக்கும் தகவல்
மும்பை: பணம் சம்பாதிக்கும் ஆசையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவரது தாயே பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இதில் மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி மாணவி தனது ஆசிரியையிடம் கூறி கதறி அழுது உதவி கோரிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் காத்கோபார் கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவருக்கு வயது 15 ஆகிறது. அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தான் மாணவியை அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மாணவியின் தாய் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாணவியை விபசாரத்தில் தள்ளி உள்ளார்.

இதுபற்றி அறிந்த மாணவி, தனது தாயிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. மாணவியை அடித்து உதைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி சம்பவம் பற்றி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறினார். இதையடுத்து அவர் தொண்டு நிறுவனம் உதவியுடன் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதன்பிறகு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி காப்பகத்தில் உள்ள நிலையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛‛மாணவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவளது தந்தை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான தாய், மாணவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் 3 பேரிடம் பணம் வாங்கி உள்ளார். அதில் 2 பேர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27 ம் தேதி சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியுடன் செப்டம்பர் மாதம் 20ம் தேதி வரை தங்கினார். அதன்பிறகு மீண்டும் வீட்டுக்கு சென்றார். நிலைமை மாறும் என்று மாணவி நினைத்தார். ஆனால் நிலைமை மாறவில்லை. இதனால் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
தற்போது மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம். அதேபோல் மாணவியை பலாத்காரம் செய்த நபர்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என கூறப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64 (பலாத்காரம்), 96 (குழந்தையை பாலியல் செயலுக்கு கட்டாயப்படுத்துதல்), 98 (குழந்தையை விபசாரம், உடலுறவுக்கு பயன்படுத்துவது ) மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications