பாலியல் தொழிலில் 10ம் வகுப்பு மாணவி.. பணத்துக்காக விபசாரத்தில் தள்ளிய கொடூர தாய்.. நடுங்க வைக்கும் தகவல்
மும்பை: பணம் சம்பாதிக்கும் ஆசையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவரது தாயே பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இதில் மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி மாணவி தனது ஆசிரியையிடம் கூறி கதறி அழுது உதவி கோரிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் காத்கோபார் கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவருக்கு வயது 15 ஆகிறது. அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தான் மாணவியை அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மாணவியின் தாய் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாணவியை விபசாரத்தில் தள்ளி உள்ளார்.

இதுபற்றி அறிந்த மாணவி, தனது தாயிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. மாணவியை அடித்து உதைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி சம்பவம் பற்றி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறினார். இதையடுத்து அவர் தொண்டு நிறுவனம் உதவியுடன் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதன்பிறகு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி காப்பகத்தில் உள்ள நிலையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛‛மாணவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவளது தந்தை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான தாய், மாணவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் 3 பேரிடம் பணம் வாங்கி உள்ளார். அதில் 2 பேர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27 ம் தேதி சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியுடன் செப்டம்பர் மாதம் 20ம் தேதி வரை தங்கினார். அதன்பிறகு மீண்டும் வீட்டுக்கு சென்றார். நிலைமை மாறும் என்று மாணவி நினைத்தார். ஆனால் நிலைமை மாறவில்லை. இதனால் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
தற்போது மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம். அதேபோல் மாணவியை பலாத்காரம் செய்த நபர்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என கூறப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64 (பலாத்காரம்), 96 (குழந்தையை பாலியல் செயலுக்கு கட்டாயப்படுத்துதல்), 98 (குழந்தையை விபசாரம், உடலுறவுக்கு பயன்படுத்துவது ) மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications