மகாராஷ்டிரா: சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங், காங். மும்முரம்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் சமமான அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகியவற்றால் இரு கட்சிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் நேற்று ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முடிந்தால் பாஜக ஆட்சி அமைக்கட்டுமே என சவால்விட்டார்.
இந்நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தொரட், அசோக் சவாண், சுஷில்குமார் ஷிண்டே, பிரித்விராஜ் சவாண் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர்.
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முதலில் காங்கிரஸ் தயக்கம் காட்டியது. ஆனால் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க விரும்புவதால் அக்கட்சி மேலிடம் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது 56 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்கின்றன மும்பை தகவல்கள். மேலும் சிறிய கட்சிகளின் 20 எம்.எல்.ஏக்களும் சிவசேனாவுக்கு ஆதரவு தர முன்வந்திருக்கின்றன.
ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் மற்றும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கவும் முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications