மராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது?
மும்பை: மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராவார் என சில மாதங்களுக்கு முன்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தது நிதின் கட்காரிக்கான லாபியின் தொடக்கம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக 160 இடங்கள் வென்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதின் கட்காரியை பிரதமராக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமாக இருந்தது. ஆனால் 282 தொகுதிகளில் வென்று மோடி பிரதமரானார்.

மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற நிதின் கட்காரி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் சுமூக உறவில் இருந்து வருகிறார். இதனால்தான் இம்முறையும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நிதின்கட்காரியை பிரதமராக முன்னிறுத்தி மாநில கட்சிகளின் ஆதரவை பெறும் வியூகம் அரங்கேற்றப்படுகிறது.
இதனிடையே நிதின் கட்காரிக்கு ஆதரவாக 'மராத்தியர்' லாபி ஒன்றும் படுதீவிரமாக செயல்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரே, மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராவார் என கூறியிருந்தார். அவரிடம், சரத்பவார் அல்லது நிதின் கட்காரி யாரை குறிப்பிடுகிறீர்கள்? என கேட்டபோது அதற்கு உத்தவ்தாக்கரே பதிலளிக்கவில்லை.
நாட்டின் பிரதமராக இதுவரை மராத்தியர் ஒருவர் கூட பதவி வகித்தது இல்லை. மொரார்ஜி தேசாய் கூட குஜராத்தைச் சேர்ந்தவர்தான். அதனால் மகாராஷ்டிராவை சேர்ந்த நிதின் கட்சி பிரதமராவதற்கு சிவசேனா முழு ஆதரவைத் தரும்,
அன்று சிவசேனா தொடங்கி வைத்த லாபி ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே மோடி அரசை விமர்சிக்கும் நிலைக்கும் கொண்டு சென்றது. சிவசேனாவின் சாம்னா ஏடும் நிதின் கட்காரிக்கு ஆதரவை தெரிவித்திருந்தது.
உத்தவ் தாக்கரேயின் ஆரூடமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நீண்டகால கனவும் நிறைவேறிடுமா? என்பது மே 23-ல் தெரிந்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications