Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானி குடும்பத்திற்கு அடுத்தடுத்து.. போன ஷாக் செய்தி.. ஜியோ, ரிலையன்ஸுக்கு லைனில் வந்த சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அம்பானி குடும்பத்திற்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. அதிலும் நேற்று வெளியான இரண்டு செய்திகள் அம்பானி குடும்பத்தை உடைத்து போட்டுள்ளது.

அதன்படி டெண்டர்களில் பங்கேற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலியான ஆவணங்களை வழங்கி ஏலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் பவர் மற்றும் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் NU BESS ஆகியவை இனி இந்திய அரசின் Solar Energy Corporation of India (SECI) ஏலம் எதிலும் பங்கேற்க முடியாது.

spectrum elon musk

அதன்படி டெண்டர்களில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதித்தது இந்திய சூரிய மின்னாற்றல் கழகம். பொதுவாக வங்கிகளின் உத்தரவாத கடிதம் இருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். இதற்காக பொய்யான உத்திரவாத கடிதத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவர் அணில் அம்பானி ஆவார்.

கடைசியாக நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Solar Energy Corporation of India நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த 2 GWh பவர் திட்டம் ஒன்றிற்கான ஏலத்தில் கூட பங்கேற்க கூடாது என்று ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

போதாத காலம்: சரியாக சொல்ல வேண்டும் என்றால் அம்பானி குடும்பத்திற்கு இது போதாத காலம்.. அவர்களுக்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. அதிலும் நேற்று வெளியான இரண்டு செய்திகள் அம்பானி குடும்பத்தை உடைத்து போட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு பக்கம் அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இதனால் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த முடிவு காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளன. அலைக்கற்றை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எப்போதும் போல ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய மார்க்கெட்டில் நுழைய தீவிரமாக முயன்று வரும் எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு யாருக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறது என்ற கேள்வி நிலவிய நிலையில்தான்.. அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கிற்கு சாதகமாக இந்த முடிவு அமைந்துள்ளது.

அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு.. நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் . டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும். உலகம் முழுக்க அலைக்கற்றை எங்கும் ஏலம் விடப்படுவது இல்லை. நிர்வாக அடிப்படையிலேயே அலைக்கற்றை அளிக்கப்படுகிறது. இதை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் எனப்படும் International Telecommunications Union (ITU) கண்காணிக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் அதே முறையை பின்பற்றி நிர்வாக அடிப்படையில் அலைக்கற்றையை வழங்குவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+