நாக்கை அறுப்போம் என்பது வன்முறையில்லையா?.. நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த விஹெச்பி தலைவர்
நபிகள் நாயகம் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுவது வன்முறையில்லையா என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அலோக் குமார் கூறியுள்ளார்.
மும்பை: நபிகள் நாயகம் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுகிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அலோக் குமார் கூறியுள்ளார். இந்தப் போக்கு உண்மையில் கவலைக்குரியது என்றும் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக ட்வீட் செய்தார். அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். இந்த நிகழ்வுகள் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் சர்ச்சை ஆகியுள்ளன. இந்தியப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் அரபு நாடுகளில் டிரெண்ட் ஆனது. இரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்தக் கருத்துகளுக்கு எதிராகத் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.

நுபுர் ஷர்மாவிற்கு எதிர்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக் கருத்தைக் கூறியதான குற்றச்சாட்டில் நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோர்ட் தீர்மானிக்கும்
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச அமைப்பின் தலைவர் அலோக் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, "நுபுர் ஷர்மா கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் இந்து தெய்வங்கள் பற்றி அவமரியாதையாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, கல்லைக் கும்பிடுபவர்கள், மசூதியில் கண்டெடுத்தது சிவலிங்கம் இல்லை அது நீரூற்று என்று பேசப்பட்டது, இந்த விவாதச் சூட்டில் நுபுர் ஷர்மா ஏதோ ஒன்றைக் கூறினார். அது சட்டப்பூர்வமானதோ, சட்ட விரோதமானதோ, அது குற்றமோ இல்லையோ அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டியது.

வன்முறையான ஆர்பாட்டங்கள்
நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே நாடு முழுதும் வன்முறையான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன, இது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுமா? நபிகள் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுகிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு உண்மையில் கவலைக்குரியது.
Recommended Video

ஓவைசி பேசுவதா?
அவர் என்ன பேசினார் என்பது இருக்கிறது, அதைக் கேட்கட்டும் அதற்கேற்ப போலீஸார் நடவடிக்கை எடுக்கட்டும். கோர்ட் கேட்கட்டும் பிறகு நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்கிறார் ஓவைசி, கைது என்பது யாரோ ஒருவர் கேட்கிறார் என்பதற்காக செய்ய முடியாது. சட்டப்படியே கைது செய்ய முடியும். நுபுர் ஷர்மா பேசியது கேமராவில் உள்ளது. போலீஸார் விசாரணை செய்ய வேண்டிய அவசியமேயில்லை, அதிலேயே எல்லாம் உள்ளது. அவர் என்ன கூறினார் என்பதை கேட்கட்டும் அதன்படி புகார் அளிக்கவும். எனவே இப்போது எதற்கு இந்த கைதுப் பேச்சு என்று அலோக் குமார் கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications