சல்லி சல்லியாக தங்கம்.. சல்லடையுடன் கோதாவரி ஆற்றில் தங்க வேட்டை.. நிஜ புதையல் கதை
மும்பை: பொதுவாக நம்மூரில் வைகை அல்லது காவிரி வறண்டால், தாமிரபரணி மட்டும் வற்றாது அதனை விட்டுவிடுவோம்... மற்றபடி பெரும்பாலான மக்களுக்கு, ஆறு குறைந்தால் வறட்சி ஏற்பட்டதாக அர்த்தம். ஆனால் மகாராஷ்டிராவின் பைதன் நகரத்தில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் கோதாவரி ஆற்றில் நீர் மட்டம் குறையும் போது, தங்கம் புதையல் போல் கிடைக்கும் இடமாக இருக்கிறது. தங்கப் புதையல் தேடி ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டிய நேரமாக இருக்கிறது. மக்கள் சல்லடையுடன் தங்கம் தேடி அலையும் கதையை பார்ப்போம்.
தங்கம் இன்றைய தேதிக்கு யாருக்குத்தான் பிடிக்காது, தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேனே நானு..வைரமே ஒருநாள் உன்னை தூக்குவேனே.. என்று பாட்டு பாடதவர்களே இல்லை.. ஏனெனில் தங்கம் விலை 1.16 லட்சத்தை தாண்டி விற்கிறது. ஒரு சவரன் தங்க நகை வாங்கினால் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து 1.30 லட்சம் என்கிற அளவில் மாறி உள்ளது.

அதேநேரம் சிலருக்கு அபூர்வமாக தங்கம் புதையல் போல் கிடைக்கும். அதிர்ஷ்டமும், தீவிரமான தேடுதலும் உள்ளவர்களுக்கு ஒரு ஆற்றில் கிடைக்கிறது. அது ஒன்றும் தங்க சுரங்கம் அல்ல.. மக்கள் ஆற்றில் வீசும் தங்கம் தான்.. என்னங்க சொல்றீங்க, மக்கள் தங்கத்தை ஆற்றில் வீசுவார்களா என்று கேட்டீர்கள் என்றால்.. ஆம் சிலர் வீசுகிறார்கள். கோதாவரி ஆற்றில் தான் நடக்கிறது.
சல்லடைகள் மற்றும் வலைகளுடன் ஆயுதம் ஏந்திய மக்கள், சல்லடைகள் மற்றும் வலைகளுடன், திங்கட்கிழமை கோதாவரி நதியின் கரையில் திரண்டனர், தண்ணீர் குறைந்து வருவதால் விலைமதிப்பற்ற பொருட்களைத் தேடினர்.
துக்கத்தில் இருக்கும் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இறுதிச் சடங்குகளைச் செய்து, நகைகள், நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வீசி எறியும் இடமாக கோதாவரி நதி இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திராவில் ஓடும் கோதாவரி ஆற்றில் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் இறந்து போன தங்களது உறவினர்களின் அஸ்தியை கரைக்க வருவதுண்டு. அவ்வாறு அஸ்தியை கரைக்கும்போது பொதுமக்கள் இறந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான தங்கம், வெள்ளி, நாணயங்களை ஆற்றில் போடுவார்கள். அவ்வாறு போடப்படும் பொருட்கள் ஆற்றங்கரையில் சகதியில் கிடக்கும்.
அந்த தங்கத்தை எடுக்கத்தான் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் போட்டிபோடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மகாராஷ்ராவின் பைதன் நகரில் ஏக்நாத் மகாராஜா கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாநிலம் முழுவதும் இருந்து பைதான் வருவதுண்டு. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜெயக்வாடி அணையில் இருந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து கரைகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
இதனால் நாம் ஏற்கனவே கூறியபடி, உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இறுதிச் சடங்குகளைச் செய்து, நகைகள், நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வீசிய கோதாவரி ஆற்றில், அவற்றை எடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கையில் சல்லடை மற்றும் கூடையுடன் ஆற்றில் இறங்கி தங்கம் தேடி வருகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் தங்களுக்கு எதாவது கோதாவரி ஆற்றில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் இருந்து மண்ணை எடுத்து சலித்து வருகின்றனர்.
இதில் அவர்களுக்கு அதிக அளவில் நாணயங்கள் கிடைக்கிறது. தங்கம் எத்தனை பேருக்கு கிடைத்தது என்ற தகவல்கள் இல்லை. எனினும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆற்றில் இறங்கி சகதிக்குள் எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் குடும்பத்தோடு வந்து தங்கத்தை புதையால நினைத்து தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் யாருக்கு தங்கம் என்ற புதையல் கிடைக்க போகிறது என்பது தெரியவில்லை..
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்











Click it and Unblock the Notifications