இளவரசர் ஹாரி- மேகன் குழந்தைக்கு ‘ஞானத்தாய்’ ஆகும் பிரியங்கா சோப்ரா?
இங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கும் குழந்தைக்கு பிரியங்கா சோப்ரா ஞானத்தாயாக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை: இங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாக அமர்த்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் நடிகை மேகனை கடந்தாண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது மேகன் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு வரும் மே மாதம் பிரசவம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹாரி -மேகன் தம்பதிக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியின் போது, யார் ஞானத்தாய், தந்தையாக யார் இருக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து மக்கள் மத்தியில் உள்ளது.
ஹாரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி தான் அக்குழந்தைக்கு ஞானத்தாய், தந்தையாக என்று தகவல்கள் வெளியானது. பின்னர் மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனி பேரும் இதில் அடிபட்டது.

ஆனால் தற்போது பிரியங்கா சோப்ரா தான் அக்குழந்தைக்கு ஞானத்தாயாக அமர்த்திக் கொள்ள பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே தெரிவித்துள்ளார். பிரியங்காவும், இளவரசி மேகனும் நெருங்கிய தோழிகள் ஆவர். மேகனின் திருமணத்தில் பிரியங்காவும் கலந்து கொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
அதோடு சமீபத்தில் தான் பிரியங்காவிற்கும் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications