சம்பளம் போட வக்கில்லை.. தாமதத்துக்கு தனியார் நிறுவனம் சொன்ன காரணத்தை பாருங்க.. விளாசும் நெட்டிசன்கள்
மும்பை: மும்பை சேர்ந்த நிறுவனம் உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தை விடுவிக்கவில்லை. ஆனால் சரியான நேரத்தில் சம்பளம் வழங்காதற்கு காரணமாக அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயில் தான் தற்போது அனைவரையும் டென்ஷனாக்கி உள்ளது. மேலும் அந்த இ-மெயிலை அந்த நிறுவனத்தின் நிறுவனர் தனது லிங்க் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மும்பையில் ஸ்டார்ப் அப் நிறுவனத்தை நடத்தி வருபவர் பார்த். இவரது நிறுவனத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உரிய நேரத்தில் பார்த் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. பொதுவாக சரியான தேதிக்கு சம்பளம் வழங்காவிட்டால் ஊழியர்கள் டென்ஷனாகி விடுவார்கள்.

ஆனால், இதனை சமாளிக்க பார்த், முன்கூட்டியே தனது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்ப ரெடியானார். இதற்கான இ-மெயிலை அவர் தயார் செய்து தனக்கு தானே அனுப்பி வைத்து கொண்டார். அந்த இ-மெயிலில் அவரது நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அதேபோல், சம்பளம் தாமதமானதற்கு அவர் மன்னிப்பு கோரவில்லை. மாறாக, அவர் சம்பள தாமத்துக்கு அவர் கூறிய காரணம் அதிர வைத்துள்ளது.
இது தான் தற்போது அனைவரையும் டென்ஷனாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் லிங்க்ட் இன் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நான் நேற்று என் ஊழியர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பினேன். அதில் சம்பள தாமதத்துக்கு வருந்துகிறேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இது தாமதம் அல்ல, இது குணநலனை (Character) மேம்படுத்துவதற்கான பயிற்சி தான். ஏனென்றால் நாம் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக நாம் ஸ்டார்ட்அப். சம்பளம் தாமதமாக கொடுத்து உங்களுக்கு பொறுமையை கற்பிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் எழுதி தனக்கு தானே அனுப்பி வைத்திருந்த ஒரு இ-மெயிலை போட்டோக பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛ வணக்கம் டீம், சம்பளம் இன்று கிரெடிட் ஆகாது. இதனை தாமதம் என்று ஒருபோதும் கூற முடியாது. இது பொறுமையை வளர்க்கும் நடவடிக்கையாகும். வளர்ச்சி என்பது வெறும் வருமானத்தால் மட்டுமே இருக்காது. இது காத்திருப்பதற்கான நேரம். சம்பளம் பெறுவதற்காக தொடர்ந்து தியான மனநிலையில் காத்திருப்பதற்கு நன்றி. இது வெறும் ஸ்டார்ட்அப் அல்ல. இது ஒரு அமைப்பு என்று கூறியுள்ளார்'' என்றார்.
இதனை பார்த்த பலரும் அந்த நிறுவனத்தின் நிறுவனரை கடுமையாக விளாசி வருகின்றனர். சம்பளம் போட வக்கில்லாமல் இப்படி ஒரு காரணமா? என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அதேபோல் பலரும் அவரை கடுமையாக சீண்டி வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications