சேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது; உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கற்ற பாடத்தை மறக்கவும் கூடாது என காங்கிரஸ் மேலிடத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து கூட்டணி அரசு அமைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான டெல்லி பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து நாளை முதல் மும்பையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. ஓரிரு நாட்களில் இம்மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைக்கும் என கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிக்கு தொடக்கம் முதலே மூத்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கடுமையாக எதிர்த்து வருகிறார். சிவசேனாவின் மூத்த தலைவராக இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்தர் சஞ்சய் நிருபம்.
சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு பேரழிவுதான் என ஏற்கனவே எச்சரித்திருந்தார் சஞ்சய் நிருபம். இன்றும் மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் நிருபம் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது காங்கிரஸ். அப்போது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இன்னமும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் மீண்டு வர முடியவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் இங்கேயும் அதேபோன்ற ஒரு நிலைதான் வரும். உத்தரப்பிரதேசம் கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் தொடர்ச்சியாக இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன். இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.
-
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications