Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் ரோட்ஷோ சென்ற எல்லா இடத்திலும் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி.. மோடிக்கு நன்றி சொன்ன சரத் பவார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோட் ஷோ நடத்திய அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது என்றும் இதற்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 2 தேர்தல்களை போல இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெரிய மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற்றதுதான். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சறுக்கியதுதான்.

India Alliance Maharashtra BJP

இம்மாநிலத்தில் ஏற்கெனவெ காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ்+சிவசேனா என மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டாக ஆட்சியமைத்திருந்தன. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து சென்று பாஜகவில் ஐக்கியமாகினர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. மட்டுமல்லாது சிவசேன கட்சி யாருக்கு சொந்தம் என்கிற சண்டையும் உருவானது. இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸிலிருந்த அஜித் பவாரும் பாஜகவில் ஐக்கியமானார். இக்கட்சியும் இரண்டாக உடைந்தது.

இந்த பின்னணியில்தான் மகாராஷ்டிரா மாநிலம் இந்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 48 தொகுதிகளையும் எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி செய்தது. எனவே பிரதமர் ஏராளமான ரோட்ஷோக்களை நடத்தினர். இருப்பினும் பாஜக கூட்டணியால் 17 தொகுதிகளையும், பாஜகவால் தனியாக 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

மறுபுறம் காங்கிரஸ் தனியாக 13 தொகுதிகளையும் மகா விகாஸ் அகாடியின் கூட்டணியுடன் சேர்த்து 30 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று இக்கூட்டணியின் தலைவர்களான சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். மேலும், மோடி ரோட் ஷோ சென்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக கூறி, அவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

சரத்பவார் பேசுகையில், "பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது எங்கள் கடமையாகும். ஏனெனில் அவர் எங்கு பேரணி, ரோட்ஷோ நடத்தினாரோ அங்கு எல்லாம் இந்தியா கூட்டணி கட்சி பெரும் வெற்றி பெற்றது" என்று கூறினார்.

அதேபோல உத்தவ் தாக்ரே கூறுகையில், "மோடியின் முகமுடியை கழற்றியதற்காக பல யூடியூபர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாலி குறித்து மோடி பேசியதையெல்லாம் அபத்தத்தின் உச்சம். எங்களிடமிருந்து பிரிந்து பாஜகவில் ஐக்கியமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துப்படக்கொள்ளமாட்டார்கள்" என்று கூறியுள்ளார். அதேபோல பிருத்விராஜ் சவான் கூறுகையில், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியையும் கருத்தில் கொண்டு சீட் பங்கீடு குறித்து முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+