இந்துத்துவ மீது எப்போதும் பிணைப்பு உண்டு: ரானே போன்ற திடீர் வரவுகள்தான் பிரச்சனை:சஞ்சய் ராவத்
மும்பை: சிவசேனாவுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பா.ஜ.க.) இடையே இந்துத்துவா பிணைப்பு உள்ளது; ஆனால் மத்திய அமைச்சர் நாராயணன் ரானே மாதிரி திடீரென பாஜகவுக்குள் வருபவர்கள்தான் பிரச்சனையே வருகிறது என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சிவசேனாவில் தனி ராஜ்ஜியம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸுக்கும் போய் அலப்பறையை காட்டினார். பின்னர் தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார். அது ஒர்க் அவுட் ஆகாத நிலையில் பாஜக ஜோதியில் ஐக்கியமானார்.

மத்திய அமைச்சராக நாராயண் ரானே
அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நாராயண் ரானேவும் அமைச்சரானார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நாராயணன் ரானே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீதான பழைய கோபத்தை காட்டினார்.

நாராயண் ரானேவால் மோதல்
சுதந்திர தினம் பற்றி தெரியாத மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கன்னத்தில் அறைவேன் என்றார் நாராயண் ரானே. இதனால் சிவசேனா பெரும் கொந்தளிப்பை காட்டியது. அத்துடன் நாராயணன் ரானேவையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தால் பாஜக, சிவசேனா தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. பின்னர் நாராயண் ரானேவுக்கு ஜாமீன் கிடைத்தது.

சிவசேனா- பாஜக உறவு
இந்நிலையில் நாராயண் ரானே தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: பாஜகவுடன் 25 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்தோம். சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரே மீது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். சிவசேனாவும் பாஜகவும் இந்துத்துவா சித்தாந்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.

நாராயண் ரானே மீது பாய்ச்சல்
இதனால் பாஜக, சிவசேனா தலைவர்களிடையே இப்படியான மோதல்கள் வெடித்தது இல்லை. சிவசேனா தலைவர்களை பாஜக தலைவர்களான தேவேந்திர பட்னாவிஸ் போன்றவர்கள் கடுமையாக வசைபாடியதும் இல்லை. சிவசேனா கட்சியினரும் இதனை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் நாராயண் ரானே போன்ற திடீரென பாஜகவில் இணைந்தவர்கள்தான் இப்படியான வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். அதுதான் பிரச்சனைக்கே காரணம். இவ்வாறு சஞ்சய் ராவ்த் கூறினார்,
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications