கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா
மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலான நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து மத்திய அரசின் திட்டம் என்ன என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் தலையங்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டுள்ளது நல்லது.

காலம் தாழ்த்தாமல்
எனினும் மேற்கு வங்கத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய சாலை பொதுக் கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் சுப்ரீம் கோர்ட் காலம் தாழ்த்தாமல் தலையிட்டிருக்க வேண்டும்.

தட்டுப்பாடு
மேலும் ஹரீத்வார் கும்ப மேளாவுக்கு சென்ற பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கும்ப மேளாவை சுப்ரீம் கோர்ட் தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இன்று மக்கள் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் இறக்கிறார்கள்.

மோசம்
தலைநகர் டெல்லியிலேயே இத்தகைய நிலை என்றால் இதற்கு யார் பொறுப்பேற்பது? தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுவை ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கொரோனாவின் இரண்டாவது அலையில் கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது.

அமைச்சரவை
நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியாவை சொர்க்க்பூமியாக மாற்ற விரும்பினார்கள். ஆனால் இன்று இந்தியாவே சுடுகாடாகிவிட்டது. கொத்து கொத்தாக இறந்தவர்களின் பிரேதங்கள் எரியூட்டப்படுவதை ஆங்காங்கே காண முடிகிறது என அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications