முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த பிகாஷ் சாஹா என்பவர் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் எதன் அடிப்படையில் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி, குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கில் உத்தரவிட்ட திரிபுரா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 21 இல் பிறப்பித்த உத்தரவில், அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை கிருஷ்ணா முராரி, அசானுதீன் அமனுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பு தன் வாதத்தில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்காகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்கிறார். அப்போது நீதிபதிகள் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை குறிப்பிட்ட இடத்தோடு, பகுதியோடு சுருக்கி விடக்கூடாது. இசட் பிளஸ் பாதுகாப்பு அம்பானி குடும்பத்தினருக்கு இந்தியா முழுவதும் வழங்கிட வேண்டும். முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு

இசட் பிளஸ் பாதுகாப்பு

இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் வெளிநாட்டிலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பானி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி முகேஷ் அம்பானிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் பிரபலமானவர்கள், விஐபிகள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பிரமுகர்களுக்கு உளவுத் துறை கொடுக்கும் தகவலின்படி மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி வருகிறது.

 விஐபிக்கள்

விஐபிக்கள்

விஐபிக்கள், விவிஐபிக்கள், விளையாட்டுத் துறை, பொழுதுபோக்குத் துறை, அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+